Saturday, July 30, 2011

சாத்திய யன்னல்கள்

ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை

வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்

உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.
...
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான்


அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்

அறுதியான வாதம்.


ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென

தூங்குவதாயொரு பாவனை.

நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்

எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…

நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்

துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா

யன்னல்களையும்.

அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்

வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.

அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு

விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர…

copyrights@shameela_yoosufali

31.07.2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

Wednesday, July 27, 2011

இரண்டாவது இரவு


தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்

அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்

அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்



அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

27.07.2011

Wednesday, July 13, 2011

வலி


முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.

ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம்
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.

வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு.

2011.06.28

Thursday, June 16, 2011

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்



இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

15.06.2011

Monday, June 13, 2011

வாழ்தலை மறந்த கதை


அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

2011.06.14

ஊதா யானை



சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று

குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.

யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்

குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

2011.06.13

Saturday, July 30, 2011

சாத்திய யன்னல்கள்

ஆயிரம் அபூர்வ ஆடைகள் துறந்து அழுக்காடை

வெங்காய வாடையுடனவள் வாவென்று கூடவழைக்காமல்

உள் செல்வாள் என்னுள்ளம் வெளிச்செல்ல ஏதொவொன்று உட்செல்லும்.
...
இல்லையென்பதவளுக்கு இனிக்கும் வார்த்தை….இதுவரை காலமும் நான்


அவளுக்காயென அணுத்துணிக்கை கூட அசைக்கவில்லையென்பதவள்

அறுதியான வாதம்.


ஆதரவோடவள் தலைகோத விளைந்தால் தொட்டாற்சுருங்கியென

தூங்குவதாயொரு பாவனை.

நடுஇரவின் போர்வைகளில் வாய்வு மிகுந்தென் நெஞ்செல்லாம்

எரிகையில் தள்ளிப்படுப்பாள் தன்னுறக்கம் கெடுமென்று…

நிலாக்கால் முன்னிரவில் அவள் தோள் சேர்ந்து கவிசொல்லத்

துடிக்குமென் மனசு புரியாமல் அடித்துச்சாத்துவாள் எல்லா

யன்னல்களையும்.

அதிசயமாயவள் முகம் கொஞ்சம் ஒளிவிடும் கணங்களில்

வாழ்தலையும் காதலையும் பற்றி வசனங்கள் கோர்ப்பேன்.

அடிமனசில் மண்டியிருக்கும் அழுக்கை கொட்டாவியோடு

விட்டவள் அயர்வாள் என் ஆவி சோர…

copyrights@shameela_yoosufali

31.07.2011

அடர் மழை வனாந்தர நேசம்

வலிதரும் குத்தீட்டி கொண்டு ஆயிரம் முறை உடலத்தில் செருகுதல் விட

உன் வார்த்தைகள் என்னுயிர் வரை சென்று

...கொஞ்சம் கொஞ்சமாயெனைக் கொன்றன.

அழுதிடல் செய்வதில்லை என்று அடித்தென் நெஞ்சாங்கூட்டை

அடக்கிடப் பார்த்தல் வீணாய் ஆயிற்று.

பொங்கும் கண்ணீர் பெருக்கெடுப்பில் மிச்சமாயுன்மேலிருந்த

கொஞ்ச நஞ்சக் கோபமும் கரைந்து பளிங்காயிற்று உள்ளம்.

உனக்கென நான் அடர் மழை வனாந்தரமாய் வைத்திருக்கும் நேசம்

அழியாது ;என் மிகை நேசம் நீயறிவது என் இலக்கன்று

நீயெனை எதிர்தோர் வார்த்தை உதிர்த்திடும் ஒவ்வொரு பொழுதிலும்

இன்னோர் நல்மரத்தின் வித்து மண்ணுக்குள் துயில் கலைந்தெழும்.

copyrights@shameela 2011 July 29

Wednesday, July 27, 2011

இரண்டாவது இரவு


தாய் தந்தை அன்பை மொத்தமாய் பெற்றவள்
களைத்ததோர் காலையிலே நான் ஜனித்தேன்.

மூத்ததைப்போல் மூக்கில்லை
முன்நெற்றி ரோமமில்லை
அவள் அசல் நான் நகல்

அவள் ஆட்டத்தில் கால் நொண்டும் தொட்டில்
அவள் அணிந்து அரைப்பழசாய் போன ஆடைகள்
அவள் விளையாடி காது பிய்ந்த கரடி பொம்மை
அவள் புதுவாசம் நுகர்ந்து,ஓரம் சுருண்ட ‘ஏழுநிறப்பூ’
பல் பதிந்த அழிறப்பர்,கம்பீரமிழந்த பென்ஸில்

அவள் திருமணம் குதியுயர் காலணியாய் அதிர நடக்க
என் மணமோ ஏழைச்செருப்பாய் நொய்ய நடந்தது.
ஒவ்வொரு விரலிலும் இவ்விரண்டு பரிசு மோதிரமாய் அவள்
மருதாணி விரல்களில் பாதி தேய்ந்தோர் மோதிரம் வெட்க நான்



அதிகமாய் வலித்ததன்று.
அவள் பார்த்து நிராகரித்த ஆண்மகனுடன் என் முதலிரவு.
அது முதலிரவன்று, ‘இரண்டாவது இரவு’

27.07.2011

Wednesday, July 13, 2011

வலி


முதுகின் அடித்தண்டில் குவிந்தாரம்பிக்கும் வலி
அரைநொடியில் தொடைகளில் கனக்கும்
காலிரண்டும் துவள அவள் கலண்டரை வெறிப்பாள்.

ஒரு நொடி, புயலின் பின் பூமியாய் உடல் சுதாகரிக்க
முன்னை விடவும் பேயாட்டத்தோடு வலி நரம்பு பிய்த்துண்ணும்.
தலைக்குள் யாரோ இடையறாது பேசுவதன்ன அசெளகரியம்
பொறுப்பதற்குள் இடையில் வாள் செருகலாய் வலி மிகும்
முகவாயில் முழங்கால் இறுக்கி உதடு கடித்து மூச்சடக்கி வியர்ப்பாள்.

வலி மிகுந்தவள் துடிக்கும் பொழுதுகளில் தவறாது
தாய் சுடுநீர்போத்தலோடு ஞாபகங்களில் ஒத்தடம் தருவாள்
அந்திக் கருக்கலின் அவன் வருவான் ஆயிரம் பழு சுமந்து
கட்டிலில் சுருண்டிருக்கும் அவள் விழி கூட நோக்காதுரைப்பான்
‘ப்ச்… திரும்பவுமா’ …‘வலி’ யின் அடர்த்தியை அவளுக்குணர்த்தியவாறு.

2011.06.28

Thursday, June 16, 2011

வாப்பும்மா அமைதியாய் உறங்குங்கள்



இருட்காட்டுக் கபுறுக்குள் அமைதியாய் உறங்கும்
வாப்பும்மா
சிறுகதை போல பேசல் மீளக்கேட்கும் துயர்
எனக்கில்லையினி.
மழை கொக்கரித்துப்பெய்யும் நடுவிரவுகளில்
அடரிருள் கபுறடியும் வாப்பும்மாவின் மையத்தும் நினைவுக்குள் வலிக்கும்.
வெள்ளிகளில் வாப்பா தவறாது சொல்வார்
கபுறடியில் நீங்கள் பொல்லூன்றி நிற்பதைக் கண்டதாக.
அறுபதுகளிலும் வாப்பா அனுபவிக்கும் தாங்கொணாத் துயர்
எனக்கும் புரியும்.

வாப்பும்மா
உங்களுடற்சாறு அருந்திச் செழித்திருக்கும் மருதாணிச்செடிக்கு
சில வேளை தெரிந்திருக்கலாம்
மரணம் ஒரு வாயிலென்பதும் வாழ்க்கைக்கு முற்றுப்
புள்ளியில்லையென்பதும்.

15.06.2011

Monday, June 13, 2011

வாழ்தலை மறந்த கதை


அவளிடம் சொன்னேன்
அடுப்படி தாண்டு
.பருப்புக்கு வெங்காயம் தாளிப்பதை விட அனேக
விஷயங்கள் இருக்கின்றன
வா உன் சொந்தக்கால் கொண்டு பூமிப்பந்து சுற்றும்
வித்தை சொல்லித் தருகிறேன்

அவள் வந்தாள்.
சுமக்க முடியாத சங்கிலிகளையும்
முடிவற்ற சந்தேகங்களையும்
சுமந்து கொண்டு

மிகுந்த பிரயாசையோடு
அவள் சங்கிலிகளை ஒவ்வொன்றாய் களைந்தேன்
சந்தேகங்கள் முடிவுறாது ஒடும் நதியை ஒத்தனவாய்
நீண்டு நெடித்தலைந்தன.

இனி என்ன
களைப்போடு கேட்டாள்.
இனி நீ வாழத் துவங்கு

வாழ்தல் என்றால்
அயர்வோடு நோக்கினேன்.
அவள்
வாழ்தலை மறந்து வெகுநாட்களாகி விட்டிருந்தன.

2011.06.14

ஊதா யானை



சுத்தமாய் வெள்ளைத்தாள்
சிதறிய கிரெயோன் கலர்கள்
இரண்டு கோடுகள்
ஒரு கோணல் வட்டம்
நம்பிக்கையோடு
யானைக்கும் தும்பிக்கையும் ஆயிற்று

குழந்தைக்கோ கர்வம்
ஊதா நிற யானையுடன் ஊர்ந்து போயிற்று.

யானைக்கு ஊதாநிறமா?
அதிருப்தியோடு கேட்டார் ஆசிரியை
இரண்டு கால் யானை எங்குள்ளது
அடித்துத் திருத்தினார்

குழந்தையின் ஊதா யானை ஊனமுற்றுப்போக
அதன் மனசின் மேலே தன் செருப்பு சப்திக்க
நடந்து போனார் ஆசிரியை.

2011.06.13