Thursday, February 28, 2008

உயிரில் பூத்த தோழமை!!!



ஒரு காத்திருப்பின்இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!

மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்...

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்....
இயற்கைசந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்வேதனையை...
ஒரு
வேதனையின்சந்தோஷத்தை....
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்...
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்....
என்னை நீயுமாய்
பகிரும்பொழுதுகளில்
பசியில்லை.....
தாகமில்லை......
மனவெளியில் மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்தேவையில்லை
இதயம் போதுமே!!!

copyrights©shameela_yoosuf_ali


Thursday, February 28, 2008

உயிரில் பூத்த தோழமை!!!



ஒரு காத்திருப்பின்இடைவேளையில்
நட்பில் கரைந்த
ஞாபகங்கள்!!

தனக்கு வேண்டியதை
`தா`என்று கேட்கவும்
கேட்காமலே
எடுத்துக் கொள்ளவுமான
உரிமைப் பத்திரம்!

மௌனத்தின் பாஷை
இத்தனை
தெளிவாய் இருக்குமா
உயிரில் கேட்கிறதே!!

ஒவியம் வரைகையில்
தூரிகையின்பெருமூச்சு
புரியும் நிதானம்
புலன்களில்...

வண்ணங்களை
வாரியிறைத்து
எனக்கு மட்டுமாய்....
இயற்கைசந்தோஷிக்கிறது!

ஒரு
சந்தோஷத்தின்வேதனையை...
ஒரு
வேதனையின்சந்தோஷத்தை....
இதயம் உணர்கிறது!

தாய்மடி மேல்
தலை வைத்தழும்
சுதந்திரம் போல்...
உள்ளார்ந்த தோழமையில்
உயிர் சிலிர்க்கிறது!

உன்னை நானும்....
என்னை நீயுமாய்
பகிரும்பொழுதுகளில்
பசியில்லை.....
தாகமில்லை......
மனவெளியில் மகிழ்ச்சி
ஆயிரம் மழைத் துளிகளாய்
வர்ஷிகின்றது!!!

காதலின் சுகம்போலவே
நட்பின் இதமும்
ஒரு புதிராய்
அதிரும் மனதின்
தலை தடவுகிறது!!!

ஒரு
நட்பின் புன்னகைக்கு
உதடுகள்தேவையில்லை
இதயம் போதுமே!!!

copyrights©shameela_yoosuf_ali


Template by:
Free Blog Templates