Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Friday, January 30, 2009

பழைய கொப்பியிலிருந்து…

ஆரம்ப வகுப்பு ஆசிரியைகளை மறக்க முடியாதது போலவே என்னால் இந்தக் கட்டுரையையும் மறக்க முடிவதில்லை.
‘எனக்கு சிறகு முளைத்தால்…’என்ற தலைப்பில் பிஞ்சு வயதில் நான் வரைந்த கட்டுரை இது.
ஆண்டு 1 முதல் 5 வரை எனது வகுப்பாசிரியையாக இருந்த என் நேசத்துக்குரிய பெளஸியா அவர்களை நன்றிகளோடு நினைவு படுத்துகிறேன்.
என் மொழி வளத்துக்கும் ,நேர்த்தியான எழுத்துக்கும்,வாசிப்புத்தாகத்துக்கும் அடித்தாளமாய் இருந்து என்னை ஊக்குவித்த இன்னொரு தாய் அவர்.
சில விடயங்களை வெறும் வார்த்தைகளால் சொல்லி விட முடியாது.
மெளனத்தின் சப்தங்களோடு………

Monday, January 26, 2009

நரைக்காத இதயம்

ஊசி ஊசியாய்
உடல் குறுக்கும்
பனிக்குளிர் இரவு !

இருள் முக்காடு
தளர்த்தி
மெல்ல முகிழ்க்கும்
அதிகாலை !

நொண்டி நொண்டி
வரும்
கடல் காற்று !

அபாபீலின் குருதியாய்
சிவக்கும்
கிழக்கு வானம் !

ஈரம் காயாத மண்ணில்
விழுதிறக்கும்
சுஜூதுகள் !

உதடு வலிக்காமல்
விரியும்
முதல் பிரார்த்தனை !

ஒரு விநாடி
…………..
ஒரே விநாடி

தூங்கப்போன
நிலவு
துடித்தெழுந்தது,


உயிர் வேர்களில்
மின்சாரம்
பாய்ந்தது.


ஹெலியே
எப்படித்துணிந்தாய்…
எப்படித்துணிந்தாய்…
எங்கள்
யாஸீனைக் கொல்ல…


இலை மடியிலிருந்து
அவிழும்
பனித்துளி போல…

காம்புக்கு வலிக்காமல்
கழன்று விழும்
ஒற்றை ரோஜா போல…

நீங்கள் சென்றீர்கள்……..
எங்கள் இதயங்களோடு

‘உயிர்த்தியாகியாய்
மரணிப்பேன்”
வலிக்கும் அவ்வார்த்தை
ஒலிக்கிறது என்னுள்…


சக்கர நாற்காலி
சந்தோஷப்பட்டிருக்கும்
ஒரு ஷஹீதைச்சுமந்த
கனதியில்…


உதடுகளில்
உலாவரும்
அந்த
புதிய புன்னகை…

கனிவும்
காயாத தெளிவும்
கலந்த
அந்தக் கண்களின்
வலிமை…


தளர்ந்த உடல்
தாங்கி நடக்கும்
எஃகு இதயம்…


இதயம் பிழிகிறது !
வெடித்து
வெளிவருகிறது
விம்மலோசை…


புஷ்ஷும் பிளேயரும்
ஏரியல் ஷரோனும்
சந்தோஷித்திருப்பார்கள்…
உங்கள்
உறைந்த விழிகளின்
தீவிரம் காணாததால்


அஹ்மத் யாஸீன்
உங்கள்
சிதறிய சடலத்துக்கு
கூட
இத்தனை சக்தியா?

பனிச்சுனை
நீர்கசியும்
இருதயத்தில்
இத்தனை
உறுதிப்பூக்களா?

ஹமாஸ்-
இங்கு தானே
பூக்கள் புன்னகைத்தன
மரணத்தைக்கண்டு…

விழிகள் அசந்த போது
விழிப்பாய் வந்த
ஹமாஸ்

பிஞ்சு நெஞ்சில்
விதையாய் விழுந்து
விருட்சமாய் விரிந்த
ஹமாஸ்

மரணம்
இங்கு கெளரவிக்கப்படுகிறது,
யாஸீனைத் தழுவியதால்…

அஹ்மத் யாஸீன்
நீங்கள் புதைக்கப்படுகிறீர்கள்…
இன்திபாழா
உயிர்த்தெழுகிறது.

வல்லரசின்
நிம்மதி தொலைத்த
உங்கள்
வெண்கலக்குரல்

மனசு வருடும்
அந்த
விழிகளின் தீர்க்கம்!


இன்னும் நரைக்காத
உங்கள் இதயம்!

யாஸீனே
எங்கிருக்கிறீர்?

மரணம் சிதைக்காத
அந்த
புன்னகையோடு
சுவனத்தோட்டத்தில்
உலவிக்கொண்டா???

இனி
ஓங்கி ஒலிக்கப்போகும்…
ஹமாஸின் அலைவரிசைக்காய்
காத்துக் கொண்டா???

பொறுத்திருங்கள்
நாங்களும் வருகிறோம்.

.................................................................................................................
உயிர்த்தியாகிகள் மரணிப்பதில்லை.மெழுகு கரைகிறதே என்று திரி எரியாமல் அணைவதில்லை.
அஹ்மத் யாஸீன் அவரது மரணத்தால் மனதுகள் வலிக்கலாம்.
ஆனால் தீயின் நாக்குகளில் போராளிகள் பொசுங்கிப்போவதில்லை.
....................................................................
2004 March 24th
copyright@shameela_yoosufali©



Template by:
Free Blog Templates